எங்கே இருக்கிறது இந்த ஏ.எம்.வி. மெஸ்..?
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில்..!
.
என்ன ஸ்பெஷல் இந்த ஏ.எம்.வி. மெஸ்ஸில்..?
.
என்ன ஸ்பெஷல் இந்த ஏ.எம்.வி. மெஸ்ஸில்..?
ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு !
.
.

இதைப் பற்றி சொல்கிறார் வெங்கட்ராமன்:
“”கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு ,
ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறோம் .
காலையில் மருத்துவமனை உள்ளே சென்று , கஷ்டப்படும் பத்து குடும்பங்களை கண்டு பிடித்து , ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு 10 டோக்கன் கொடுப்பேன் . ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வாங்கிக் கொள்ளலாம் .
அதே போல் பகலில் 40 டோக்கன்கள் கொடுப்பேன் . இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறோம் . இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் ..”
.
“எப்படி வந்தது உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா..?”
.
“எப்படி வந்தது உங்களுக்கு இப்படி ஒரு ஐடியா..?”
வெங்கட்ராமன் சொன்னார் :
”ஈரோடு அரசு மருத்துவமனயில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
”ஈரோடு அரசு மருத்துவமனயில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் .
அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டாலும் , நோயாளிகளுக்கு துணையாக வந்தவர்கள் சாப்பிட வெளியில்தான் செல்ல வேண்டும். பலருக்கும் இதற்கு கையில் பணம் இருக்காது. அதற்காகத்தான் இந்த திட்டம் .
ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவோம் . ஹாஸ்பிடலுக்கு போய் அவர்கள் அதை பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் .
முதலில் இதை இலவசமாக செய்ய நினைத்தேன். ஆனால் எதையும் இலவசமாக கொடுத்தால் , அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. அதனால்தான் ஒரு ரூபாய் வாங்கிக் கொள்கிறேன்..”
.
“சரிங்க வெங்கட்ராமன் .. இதனால் உங்களுக்கு ...?”
.
புரிந்து கொண்டு பதில் சொன்னார் வெங்கட்ராமன் : “நஷ்டம்தான் ... ஆனால் இப்போது நிறைய பேர் இந்த திட்டத்திற்கு நன்கொடை தருகிறார்கள் . அவர்கள் பெயரையும் என் கடையில் எழுதி வைத்து விடுகிறேன்.”
.
“சரிங்க வெங்கட்ராமன் .. இதனால் உங்களுக்கு ...?”
.
புரிந்து கொண்டு பதில் சொன்னார் வெங்கட்ராமன் : “நஷ்டம்தான் ... ஆனால் இப்போது நிறைய பேர் இந்த திட்டத்திற்கு நன்கொடை தருகிறார்கள் . அவர்கள் பெயரையும் என் கடையில் எழுதி வைத்து விடுகிறேன்.”
பேச்சின் இடையே சிறிய இடைவெளி விட்டு விட்டு , வெங்கட்ராமன் தொடர்ந்தார் : “ கல்லூரியில் படிக்கும் என் மகள் மட்டும் நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்...”
“சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால்....?”
“இன்னும் நிறைய பேருக்கு ...ஏன் ..இந்த அரசு மருத்துவமனைக்கு வரும் அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் சாப்பாடு கொடுக்க முடியும் . அந்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ..”
.
அடடா... எப்பேர்ப்பட்ட ஒரு உத்தம மனிதன் ..?
இவரது இந்த உயர்ந்த உள்ளம் பற்றி அறிந்ததால்தான் , ராமகிருஷ்ணா மடம் இவர் மகளின் கல்லூரி செலவுகளை , தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டது .
.
சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன் ....
ஊர் பெயர் தெரியாத யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல் இந்த மனிதர் செய்த உதவி ...
சரியான நேரத்தில் இவர் மகளுக்கு , ஏதோ ஒரு ரூபத்தில் வந்து எதிர்பாராத மிகப் பெரும் உதவியை செய்து இருக்கிறது .
.
அடடா... எப்பேர்ப்பட்ட ஒரு உத்தம மனிதன் ..?
இவரது இந்த உயர்ந்த உள்ளம் பற்றி அறிந்ததால்தான் , ராமகிருஷ்ணா மடம் இவர் மகளின் கல்லூரி செலவுகளை , தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டது .
.
சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன் ....
ஊர் பெயர் தெரியாத யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல் இந்த மனிதர் செய்த உதவி ...
சரியான நேரத்தில் இவர் மகளுக்கு , ஏதோ ஒரு ரூபத்தில் வந்து எதிர்பாராத மிகப் பெரும் உதவியை செய்து இருக்கிறது .
“அன்னபூர்ணே
ஸதா பூர்ணே
சங்கர ப்ராண வல்லபே
ஸதா பூர்ணே
சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி
..
சிவனின் ப்ராணன் போன்ற
ஓ அன்னபூர்ணா தேவியே !
ஞானமும் வைராக்யமும்
கொடுக்கும்படியான
அன்னத்தை அளிப்பாயாக
.
சரி ..அன்னபூரணியை எங்கே தரிசிப்பது..?
ஈரோட்டில் ..
அரசு மருத்துவமனைக்கு அருகில் ...!
பிக்ஷாம் தேஹி ச பார்வதி
..
சிவனின் ப்ராணன் போன்ற
ஓ அன்னபூர்ணா தேவியே !
ஞானமும் வைராக்யமும்
கொடுக்கும்படியான
அன்னத்தை அளிப்பாயாக
.
சரி ..அன்னபூரணியை எங்கே தரிசிப்பது..?
ஈரோட்டில் ..
அரசு மருத்துவமனைக்கு அருகில் ...!
No comments:
Post a Comment